Thursday, November 27, 2014

குரங்கு மாறினால் பூமாலை தப்பிக்குமா !?

        
   "பணம் சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கிறது ! அதற்கு ஏண்டா புனிதமான அரசியல பாவிக்கிறீங்க !?" என்பது ஒரு கலைக் கூத்தாடி சினிமாவில் பாவித்த வசனமாகும் .அபூஹுரைராவுக்கு (ரலி ) சைத்தான் கற்றுக் கொடுத்த ஆயதுல் குர்சி போல பொய்மையின் தெளிவான உருவமான சினிமா சொன்ன உண்மை இதுவாகும் .

Friday, November 21, 2014

அட இது தாண்டா மனிதாபிமானம் ...!

    
   1845ல் 10 லட்சம் பேரை அயர்லாந்து பஞ்சம் காவு வாங்கியது. உதுமானிய கலீஃபா அவர்களுக்கு உதவிட 10,000 ஸ்டெர்லிங்கை நிதியாக தர முன் வந்தார்.

            ஆனால் ஐயர்லாந்தின் அரசி வெரும் 2000 ஸ்டெர்லிங்கை மட்டுமே தன் நாட்டு குடி மக்களுக்கு தர உத்தேசித்திருந்ததால் கலீஃபாவின் உதவியை வெரும் 1,000 ஸ்டெர்லிங்கோடு நிருத்திக்கொள்ள கேட்டுக்கொண்டாள் .

இலங்கையில் இன்று ........

                         நம்பி ஏமாறுதல் இந்த உம்மத்தின் தலைவிதி என்றால் அதற்கான இன்னொரு கதவு இப்போது திறக்கப் படுகிறது .இருக்கின்ற பேயில் நல்ல பேயை தேர்வது உலமாக்களால் காலத்தின் கடமையாக வேறு சொல்லப்படுகிறது .என்ன செய்வது பிணம் தின்னும் சாத்திரத்தில் தானே இரையாகும் ஏமாந்த ஜென்மங்களை ஜனநாயக தேசிய சிறுபான்மையில் தவிர வேறு எங்கும் காண இன்று முடியாது .

ஐ .எஸ் இனது நகர்வு இஸ்லாமிய அரசியலா !?(சில கேள்விகள் )

                                                            ஒரு காலம் இருந்தது ,அது முஸ்லீம்களிடமும் முஸ்லீம் உலகத்திடமும் முஸ்லீம் அல்லாதோரும் பாதுகாப்பையும் புகழிடத்தையும்,வேண்டக்கூடியதாக இருந்தது .அது இஸ்லாத்தின் தனிப்பெரும் அரசியலான கிலாபா சாம்ராஜியத்தோடு முஸ்லீம்கள் ஒன்றி இருந்த நேரமாகும் .அப்போது இஸ்லாத்தை தவறாக பயன்படுத்திய அதிகாரங்களும் ,அதிகாரிகளும் இருந்தார்கள் .ஆனால் முஸ்லீம் உம்மத் அவமானத்தோடு தலைகுனிய வேண்டிய நிரந்தர நிலை ஏற்படவில்லை.

Thursday, November 20, 2014

ஐ .எஸ் .இனது நகர்வு இஸ்லாமிய அரசியலா !?

   இன்று பட்டி தொட்டி எங்கும் பேசப்படும் ஒரு பிரதானமான விடயம் ஐ .எஸ் பற்றியதே என்றால் அது மிகையான கருத்தல்ல .இன்னும் என்னோடு பழகும் முஸ்லீம், முஸ்லீம் அல்லாதோர் என அநேகமானோர் இப்போது கேட்கும் கேள்விகளில் பிரதானமானது இந்த ஐ .எஸ் கூறும் இராணுவ இராஜாங்கம் பற்றியதே .ஆனால் விடயத்தை அவர்களுக்கு புரிந்த வகையில் விளக்குவது சற்று கடினமானது என உணரக்கூடியதாக உள்ளது .

Saturday, November 15, 2014

பொய்க்கால் குதிரையில் போவோமா ஊர்கோலம் !!!!

 
மாயையில் மயங்கிய மதிகெட்ட கோலங்கள் !
விஷத்தை அமுதாக்கிய விநோதப் பார்வைகள் !
பிழைக்குள் பிழைப்புத் தேடும் புரியாத வாழ்க்கைகள் !
இது இன்று அண்டம் சுமக்கும் ஆச்சரிய உண்மைகள் !

Friday, November 14, 2014

அமெரிக்க தரப்பு சொல்லும் அம்புலிமாமா கதையின் உண்மை நிலை என்ன !? (ஒரு புரிதலுக்கான பதிவு )

    
    ஈராக் விவகாரத்தில் அண்மைய செய்திகள் ஒரு திட்டமிட்ட அரசியலின் கிளைமாக்ஸ் காட்சிகளுக்கான வடிவத்தை சுட்டுவதாக இருக்கிறது .வெறும் அமெரிக்க எதிர்ப்பு என்ற மேலோட்ட பார்வைகளை தாண்டிய ஒரு இரகசிய சூத்திரத்தின் நிறுவல் எனும் உண்மையாக நாளை அது காட்டி நிற்கலாம் .அது என்ன ?

          கடந்த இரு வாரங்களுக்கு முன் ஐ .நா .சபை சிரியாவின் இரசாயன ஆயுதங்களை அழிக்கும் தனது உறுதியான செயல்திட்டத்தை அமுல் படுத்தப் போவதாக தெரிவித்துள்ளது .அதேநேரம் 1500 துருப்பினரை ஈராக் அரசுக்கு சார்பாக ஐ .எஸ் அமைப்புக்கு எதிராக நேரடி களமிறக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது .

Friday, November 7, 2014

இஸ்லாமிக் எமிரேட்ஸ் மாயை மேல் எழுப்பப் படும் எதிரியின் சமரசம் !

               
  நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப் பட்ட ) மார்க்கம் 
இஸ்லாமாகும் ....(ஆள இம்ரான் :வசனம் 18)

 ( அல்லாஹ்வின் தூதரின் (ஸல் ) அரசியல் நகர்வு தொடர்பில்  வெற்று ஆன்மீகப் பதிவோடு பார்க்கும் மதவாதமே தெரிகிறது .மதீனா யுகம் என்ற சித்தாந்த எழுச்சியின் மைல் கல்லாக அந்த ஹிஜ்ரா பார்க்கப்படுவதில்லை .அதனால்  ஆட்சி தொடர்பான இஸ்லாத்தின் கட்டளை மற்றும் செயல் கிரமம் மறைந்து போகின்றது .

     இங்கு நான் பதிவிட வருவது இகாமதுத் தீன் என்பதன் சுன்னா எது என்ற கோட்பாட்டு பார்வை பற்றியதே .அதிகாரம் மற்றும் இஸ்லாமிய சரீயாவின் பிரயோகம் தொடர்பில் ஒரு பக்குவமான பிரிகோட்டை போட்டது காலனித்துவ வாதிகளின் சதியே .அந்த வகையில் சிலுவை சித்தாந்திகளை அரவணைக்கும் மன்னரிசம் முதல் நவ காலனித்துவத்துக்கு சலாம் போடும் இஸ்லாமிய ஜனநாயகம்,மற்றும் முரண்பாட்டு இராணுவ அரசியலை காட்டி நிற்கும் இஸ்லாமிக் ஸ்டேட் ,எமிரேட்ஸ் போன்ற தேடல்களின் உண்மை நிலையை உணர்த்த இந்தப்பதிவு உதவலாம் .)
         

Friday, October 31, 2014

அந்த அக்டோபர் முப்பது 1990 முதல் இன்றுவரை ! (மறந்த சுவடுகளை மீட்டிப்பார்க்கும் ஒரு முஸ்லீம் அகதி !)

    
       ஒரு அராஜஹத்தின் அசிங்கத் தீர்ப்பு ! மனிதம் மீறிய அடாவடி இறுமாப்பு !விடுதலைப் புலிகள் வடக்கில் வைத்த ஆப்பு ! அது முஸ்லீம் 
உம்மத்தின் வாழ்விட உரிமை பறிப்பு !அந்த அக்டோபர் முப்பது 1990 !

   தம்பியின் (பிரபாகரன் ) இயக்கம் 'தம்பிலா' என எம்மை வாஞ்சையோடு விளிப்பவர்களை அணைக்கச் சொன்னதா !?அநாதை தனத்தை உணர்த்தி உலகளாவிய உம்மத்தின் நிஜத்தோடு சேர்த்துப் பார்த்ததா!? 

Friday, October 24, 2014

ஹிஜ்ரி 1436 ! அல்ஹம்துலில்லாஹ் சொல்வதா !? இன்னாலில்லாஹ் சொல்வதா !?

      ஒரு சுயநலமிக்க கொடூரமான குப்ரிய சித்தாந்த அதிகாரத்தின் கீழ் அந்த அசத்திய (அ)நாகரீகத்தின் அடிப்படையில் மாதங்களையும் வருடங்களையும் கணிப்பிட்டு ஏதோ பெயருக்காக ஹிஜ்ராவை கல்குலேட் பண்ணுவது  முஸ்லீம்களுக்கு இன்று ஒரு சம்பிரதாயம் !

Thursday, October 23, 2014

ஒரு தேசத்தின் வேஷம் கலைகிறது !(மறு பதிவு )

       அது 2001 செப்டம்பர் 11 திகதி  வழமை போலவே விடிந்த அந்தப் பொழுது ஒவ்வொரு அமெரிக்க குடிமகன் உள்ளத்திலும் 1940 களில் ஜப்பான் நடத்திய 'பேர்ல் ஹார்பர் ' தாக்குதலை விட பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது .

ஹராத்தில் தேடப்படும் ஹலால் !!!

       ஒரு கதை சொல்வார்கள் ; நைட் கிளப் ஒன்றை முஸ்லிம் ஒருவன் நடாத்தி வந்தானாம் ! போதை வஸ்துக்கள் ,நிர்வாணப்பெண்கள் இப்படி எதற்குமே பஞ்சமில்லையாம் !ஒரு முறை அவனது முஸ்லிம்!! வாடிக்கையாளர்களுக்கு ஒரு சந்தேகத்துக்கிடமான தகவல் ஓன்று கிடைத்தது ; குறித்த நைட் கிளப்பில் இறைச்சி வகையோடு பன்றி இறைச்சியும் பரிமாறப்படுகின்றது ;என்பதுதான் !!

Wednesday, October 22, 2014

மாற்றம் என்றும் மாறாது !!!(பிக்ஹுள் அகல்லியாத் பற்றிய ஒரு தெளிவுக்காக. )

     எனது பெயர் மாற்றம் சடவாதத்தை பூஜிக்கும் உலகில் சத்தியத்தை சாத்தியமாக்கும் தீராத தாகத்தோடு வாழும் அபலை  .மாறும் உலகில் நிலையானது இஸ்லாம் என அடித்துக் கூறிய பலர் டொலர் சித்தாந்தத்தை பஞ்சனை ஆக்கி அசத்திய வாழ்வில் ஆனந்தம் கண்ட போது இந்த மாற்றத்துக்கு எல்லாமே தூக்கி வாரிப் போட்டது .

முதலாளித்துவ ஏகாதிபத்திய ஏமாற்று ஒரு புரிதல் .......

 
  பட்டாங்கதியை பல அங்குலங்கள் நெஞ்சினுள் பாய்த்து விட்டு ஒரு இரண்டு அங்குலம் பின்னால் இழுத்து எதோ விடயத்தை சரிப்படுத்தியதாக (முதலாளித்துவ அமெரிக்க) அரசு எம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது .              - மார்டின் லூதர் கிங் -
               வெள்ளையர்கள் அல்லாதோரை மிருகத்தை விட கேவலமாக நடாத்தி விட்டு அதற்கு எதிரான இரத்தம் சிந்தும் போராட்டம் வலுவான போது சமரச அரசியலின் தூண்டில் அமெரிக்காவில் முதலாளித்துவ வாதிகளால் போடப்பட்டது .அதன் இரையாக கறுப்பின மக்களுக்காக சில சலுகைகள் வழங்கப்பட்டது .அந்த எமாற்றின் உண்மையை உணர்ந்த ஒரு கறுப்பின போராட்ட தலைவனின் வார்த்தைகளே மேலே தந்தவை .

Friday, October 17, 2014

சூடு பறக்கும் குப்ரிய எதிர்ப்பும் சுரணை கெட்ட முஸ்லீம் உட்கட்சி மோதலும் .....!!!

         இலங்கையின் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையிடம் விசாரணை நோக்கில் சிங்கள ,ஆங்கில அல் குர் ஆன் மொழி பெயர்ப்புகளை பெற்றுக்கொண்டுள்ளது .அதற்கான சந்தேகங்களும் ஊகங்களும் ஒருபுறம் இருக்க போலீஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோகன தெரிவித்திருக்கும் விளக்கம் விடயத்தின் திசையை இன்னொரு கோணத்தில் சிந்திக்க தூண்டியுள்ளது .